Nov 13, 2022

Order 1 Rule 2 - Civil Procedure Code

கட்டளை 1  விதி  2

உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908


ORDER  1  :  PARTIES

RULE  2  :  POWER OF COURT TO ORDER SEPARATE TRIALS

 

" Where it appears  to the court that any joinder of parties may embarrass or delay the trial of suit, the court may put the plaintiffs to their election or order separate trails or make such other order as may be expedient. "


" தரப்பினர்களின் சேர்க்கை வழக்கு விசாரணையை சங்கடப்படுத்தும் அல்லது தாமதப்படுத்தும் என நீதிமன்றத்திற்கு தோன்றும் போது, நீதிமன்றம் வாதிகளையே தேர்வு செய்ய விட்டுவிடலாம், அல்லது தனிதனி வழக்கு விசாரணை நடத்த கட்டளையிடலாம், அல்லது சூழ்நிலைக்கு தக்கதென தோன்றும் வேறு உத்திரவினை பிறப்பிக்கலாம்."


முந்தைய கட்டளை 1 விதி 1  விதியில் யாரெல்லாம், எதன் அடிப்படையில் ஒன்று சேர்ந்து அல்லது தனித்து வாதிகளாக இருந்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்பதை பார்த்தோம். அதனை Dominus Litus என்கிறார்கள். வாதிக்கு என்ன வழக்கு, என்ன பரிகாரம், யார் மீது, யாருடன் சேர்ந்து என்பதை தீர்மானித்துக் கொள்ள இருக்கிற உரிமை அது. 

இந்த விதியில், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களா வாதிகளாக சேர்ந்து வழக்கு தாக்கல் செய்கையில், நீதிமன்றம் அதை அனுமதிப்பது அல்லது மாற்றி அமைப்பது, அல்லது நீதிமன்றம் நாடினால் மறுக்கவும் முடியும் என்பதை பற்றி பேசுகிறது.

உதாரணமாக, பல முதலீட்டாளர்கள் சேர்ந்து ஒரே நிறுவனத்திற்கு எதிராக வழக்கிடுகிரார்கள் என வைத்துக் கொள்வோம். இங்கே ஒவ்வொருவரின் தனித்த உரிமையும் நீதிமன்றம் தனித்தனியாக ஒரே வழக்கில் தீர்மானிக்க மிகவும் சிரமப்படும். அல்லது ஒவ்வொருவரும் தனித்தனியாக சாட்சிய விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டி இருக்கலாம். தனக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஏலம் எடுப்பவர்கள் சேர்ந்து ஒரே வழக்கிட முடியுமா? நீதிமன்றம் யாருக்கு முன்னுரிமை வழங்க முடியும்? இது குழப்பம் இல்லையா? அதனால் தான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் விதமாக இந்த விதி உள்ளது.

அதே நேரம், ஒரே வழக்கில் ஒரு நபரே தனக்காகவும் தன்னுடைய நிறுவனத்திற்காகவும் என ஒன்றுக்கு மேற்பட்ட வாதிகளாக இருக்க முடியும். ஒரு பூசாரி தனக்காகவும், கோயிலின் நிர்வாகி நிலைமையில் என இருவராக இருக்க முடியும். ஒரு நபர் தன் தனிப்பட்ட சொத்திற்க்காகவும் குடும்ப சொத்திற்க்காகவும் பாகதாரர் நிலைமையிலும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக வழக்கிட முடியும். ஒரு பெற்றோர் தனக்காகவும், தனது மைனர் குழந்தைகளுக்கு காப்பாளர் நிலைமையிலும் வாதிகளாக வழக்கிட முடியும். 

இது போன்ற பல வாதிகள் இருக்கும் வழக்கில், வழக்கு விசாரணையை சிக்கலின்றி நடத்தும் நோக்கிலும்,  நீதிமன்றம் அல்லது வாதிகளின்  உளத்தேர்விற்காகவும், இந்த விதி செயல்படும்.

இதுவரையில் வாசித்து இருந்தால், தங்களின் கற்றல் ஆர்வத்தினை பாராட்டுகிறேன். தங்களின் வருகைக்கு நன்றி!

எனது வீடியோ பதிவுகளை Law In Tamil - Legally Simplified சேனலில் பார்வையிடலாம்.


- த.செ.முசம்மில் மீரான், வழக்கறிஞர், திருவைகுண்டம்.

என்னை தொடர்பு கொள்ள - @AdvMeeranTJ