சார் பதிவாளர் அலுவலகத்தில் உரிமையாளரின் அசல் ஆவணம், பட்டா, தீர்வை முதலியன கேட்பார்கள்.
அசல் ஆவணம் தொலைந்து போயிருந்தால், அது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்து கிடைக்கப் பெறவில்லை என்று சான்று பெற்று, நாளிதழில் விளம்பரம் கொடுத்து, அதன் பின் நகல் ஆவணத்தை கொண்டு பத்திரம் பதிய வேண்டி இருக்கும்.
ஆனால், இந்த விதிகள் பதிவு சட்டத்திலோ அல்லது பதிவு விதிகளிலோ கிடையாது. இது பதிவுத் துறை சுற்றறிக்கை மூலம் உருவாக்கப்பட்ட வழிகாட்டு விதிமுறைகள் ஆகும்.
இந்த விதிமுறைகள் சட்டப்படியானவை அல்ல என்றும், பத்திரம் பதிய வருபவர்கள் சரியான நபர்களா என்பதை கவனித்தால் போதும் என்றும், பதிவு செய்வதற்கு அசல் ஆவணம் கட்டாயம் இல்லை என்றும், அதன் காரணமாக பதிவு செய்ய மறுக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தீர்ப்பை சார் பதிவாளர்கள் புரிந்து கொண்டால், பொது மக்களுக்கு அலைச்சல் தவிர்க்கப்படும்.
தீர்ப்பின் இணைப்பு ஆங்கிலத்தில் வாசித்துக் கொள்ளலாம்.
தமிழில் காணொளி யாக வெளியிட்டுள்ளேன்.
நன்றி!
- த. செ. முசம்மில்மீரான்,
வழக்குரைஞர்
திருவைகுண்டம்.
பின்குறிப்பு:
இந்த வழக்கின் தீர்ப்பை பின்பற்றி 11-02-2021 ஆக அண்மையில் உயர்நீதிமன்றம் மற்றொரு வழக்கின் Sivanadiyan -vs- The SubRegistrar தீர்ப்பில் மறுபடியும் அசல் ஆவணம் இல்லை என்று பத்திர பதிவை மறுக்க கூடாது என உறுதி படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை பகிர்ந்த நண்பர் வழக்கறிஞர் விஜயன் அவர்களுக்கு நன்றி. அவரது குரல் பதிவை கீழே கேட்கலாம்.